ADDED : ஏப் 06, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் அருகே பணம்பறித்த ரவுடி கைது
கரூர்:கரூர் மாவட்டம், செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி, 55; இவர் நேற்று முன்தினம் நத்தமேடு சரவணாநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் பகுதியை சேர்ந்த ரவுடி தனசேகரன், 33, குப்புசாமியிடம் இருந்து, 500 ரூபாயை பறித்து கொண்டு ஓடி விட்டார்.
இதுகுறித்து, குப்புசாமி கொடுத்த புகாரின்படி, தனசேகரனை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். தனசேகரன் மீது பல்வேறு மாவட்டங்களில், 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

