/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேம்பாலம் திறந்தாச்சு; புறக்காவல் நிலையம் எப்போது
/
மேம்பாலம் திறந்தாச்சு; புறக்காவல் நிலையம் எப்போது
ADDED : ஏப் 09, 2025 01:28 AM
மேம்பாலம் திறந்தாச்சு; புறக்காவல் நிலையம் எப்போது
கரூர்:கரூர் அருகே, புதிதாக கட்டப்பட்ட உயர் மட்ட மேம்பாலம் திறக்கப்பட்டுள்ள நிலையில், புறக்காவல் நிலையத்தை மீண்டும் அமைக்க வேண்டும்.
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை பெரிய ஆண்டாங்கோவில் பிரிவில், புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. நாள்தோறும் போலீசார் பணியில் இருந்தனர். இந்நிலையில் கடந்த, 2019ல் பெரிய ஆண்டாங்கோவில் பிரிவில், 24.64 கோடி ரூபாய் செலவில், புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. இதனால், அந்த பகுதியில் செயல்பட்டு வந்த புறக்காவல் நிலையம் அகற்றப்பட்டது. தற்போது, மேம்பாலம் கட்டும் பணிகள், நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து, மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் இருந்து, கரூர் நகருக்கு செல்லும் வாகனங்கள், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள குகை வழிப்பாதை வழியாக செல்கிறது. அப்போது, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, சர்வீஸ் சாலையில் அகற்றப்பட்ட புறக்காவல் நிலையத்தை திறந்து, வழக்கம் போல் நாள்தோறும் போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் என்ற,
கோரிக்கை எழுந்துள்ளது.