sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சின்னையம்பாளையத்தில் மாடு மாலை தாண்டும் விழா

/

சின்னையம்பாளையத்தில் மாடு மாலை தாண்டும் விழா

சின்னையம்பாளையத்தில் மாடு மாலை தாண்டும் விழா

சின்னையம்பாளையத்தில் மாடு மாலை தாண்டும் விழா


ADDED : ஏப் 11, 2025 01:19 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னையம்பாளையத்தில் மாடு மாலை தாண்டும் விழா

குளித்தலை:குளித்தலை அடுத்த, சின்னையப்பாளையம் பஞ்.. பெத்தாநாயக்கனுாரில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு, உடுமல் சீல்நாயக்கர் மந்தையில், மூக்காயி பட்டவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முதலாம் ஆண்டு மாலை தாண்டும் திருவிழா, நடத்துவதற்கு முடிவு செய்தனர். கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் சுவாமிக்கு சாட்டப்பட்டு திருவிழா தொடங்கியது.

நேற்று முன்தினம் கோவில் முன்பாக சலை எருது மாடுகளுக்கு, 14 மந்தையர்கள் வரிசைப்படி வரவேற்று புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து தாரை தப்பட்டை முழங்க, கோவில் எதிரே, 2 கி.மீ., தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு சலை எருது மாடுகளை அழைத்து சென்றனர். அங்கு எல்லைசாமி கோவிலில் சிறப்பு அபிேஷகம் செய்து, அனைத்து சலை எருது மாடுகளுக்கும் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில், 300க்கும் மேற்பட்ட மாடுகள் ஓடின.

இதில் கரூர் மாவட்டம், சிவாயம் பஞ்., குப்பாச்சிப்பட்டி பகுதியில் உள்ள தாசில்பொம்மா நாயக்கர் மந்தை மாடு முதலாவதாகவும், திண்டுக்கல் மாவட்டம், கோப்பா நாயக்கர் மந்தை மாடு இரண்டாவதாகவும் தாண்டி வெற்றி பெற்றது.






      Dinamalar
      Follow us