தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வடசேரி பாம்பலம்மன் கோவில்கும்பாபிஷேக விழா கோலாகலம்

வடசேரி பாம்பலம்மன் கோவில்கும்பாபிஷேக விழா கோலாகலம்

வடசேரி பாம்பலம்மன் கோவில்கும்பாபிஷேக விழா கோலாகலம்


ADDED : ஏப் 11, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடசேரி பாம்பலம்மன் கோவில்கும்பாபிஷேக விழா கோலாகலம்

குளித்தலை:குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., பூவாயிபட்டியில் விநாயகர், காளியம்மன், பாம்பலம்மன், பகவதி அம்மன் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன. கோவிலில் புனரமைப்பு பணிகள் நிறைவுற்று கடந்த, 9ல் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது.

புனித நீர் அடங்கிய கும்பத்தை, சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, மகா கணபதி பூஜை, நாடி சந்தனம், லட்சார்ச்சனை செய்தனர். நேற்று காலை இரண்டா கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும், புனித நீர் கும்பத்தை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

வேத மந்திரங்கள் மூலம், புனித நீரை கலசத்திற்கு ஊற்றி கும்பாபி ேஷகம் செய்தனர். பின் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும், தோகைமலை தமிழ் சங்க நிறுவனர் காந்திராஜன் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us