/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி விவசாயிகள் மும்முரம்
/
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி விவசாயிகள் மும்முரம்
ADDED : ஆக 21, 2025 02:00 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், புனவாசிப்பட்டி, மேட்டுப்பட்டி, குழந்தைப்பட்டி, வரகூர், கோடங்கிப்பட்டி, சிவாயம், மலையாண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். கிழங்கு சாகுபடிக்கு தேவையான தண்ணீர், கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது.
தற்போது களைகள் அகற்றப்பட்டு, செடிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது. மழை பெய்து வருவதால் செடிகளில் கிழங்குகள் பிடித்து வருகிறது. இந்த பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடந்து
வருகிறது.

