ADDED : ஏப் 03, 2026 04:11 AM
அ நிறம் | அளவு
கரூர், கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். கூட்டணியின் கட்சி நிர்வாகிகள், களப்பணியின் அவசியம் குறித்தும், ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் பேசினர்.
நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, தி.மு.க., வேட்பாளர்கள் கரூர்- ஆசி.தியாகராஜன், கிருஷ்ணராயபுரம்- ராஜா, குளித்தலை சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
