sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்தில் 14,167 மாணவர்கள்10ம் வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்பு

/

கரூர் மாவட்டத்தில் 14,167 மாணவர்கள்10ம் வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்பு

கரூர் மாவட்டத்தில் 14,167 மாணவர்கள்10ம் வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்பு

கரூர் மாவட்டத்தில் 14,167 மாணவர்கள்10ம் வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்பு


ADDED : பிப் 26, 2025 01:03 AM

Google News

ADDED : பிப் 26, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் மாவட்டத்தில் 14,167 மாணவர்கள்10ம் வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்பு

கரூர்:கரூர் மாவட்டத்தில், 14 ஆயிரத்து, 167 மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்றனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச், 3 முதல், 25 வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச், 5 முதல், 27 வரையும், 10ம் வகுப்புக்கு மார்ச், 28 முதல் ஏப்., 15 வரையும் பொதுத்தேர்வு நடக்கிறது.

முன்னதாக, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கடந்த, 7 முதல், 14 வரை செய்முறை தேர்வு நடந்தது.தற்போது, பத்தாம் வகுப்புக்கு நேற்று முன்தினம் செய்முறை தேர்வு துவங்கியது. வரும், 28ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. கரூர் மாவட்டத்தில், 167 பள்ளிகளில் உள்ள மையங்களில், 14 ஆயிரத்து, 167 மாணவர், மாணவியர் செய்முறை தேர்வு மேற்கொண்டு வருகின்றனர். மாணவ, மாணவியர் எண்ணிக்கை அடிப்படையில் காலை, மதியம் என இரு நேரமும் செய்முறை தேர்வு நடக்கிறது. நேற்று அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு நடந்தது.






      Dinamalar
      Follow us