/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்
/
தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 11, 2024 06:33 AM
கரூர்: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நட-வடிக்கை குழு, கரூர் மாவட்ட கிளை சார்பில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் வேலுமணி தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், அரசாணை, 243-ஐ முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியருக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை-முறைப்படுத்த வேண்டும், கற்பித்தல் பணியை தவிர, பிற பணி-களில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் உள்-ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஜெயராஜ், செல்வதுரை, தர்ம-லிங்கம், தமிழ்செல்வன், ரகுபதி, அமுதன், சாந்தி, தமிழரசி உள்-பட பலர் பங்கேற்றனர்.

