/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அரசு கலைக்கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
/
கரூர் அரசு கலைக்கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
கரூர் அரசு கலைக்கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
கரூர் அரசு கலைக்கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
UPDATED : ஜூலை 04, 2024 10:44 AM
ADDED : ஜூலை 02, 2024 06:41 AM
கரூர் : கரூர் அரசு கலைக்கல்லுாரியில், முதலமாண்டு மாணவர் சேர்க்கைக்கான, மூன்றாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
கரூர் அரசு கலைக்கல்லுாரியில் இளம் கலை, இளம் அறிவியல் முதலமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம் கடந்த மே 30 ல் தொடங்கி, கடந்த ஜூன், 14 வரை நடந்தது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த, 24, 28 ல் நடந்தது.அதில், பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம், பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.பி.ஏ., பி.ஏ., வரலாறு மற்றும் பொருளாதாரம், பி.எஸ்.சி., ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடந்தது. நேற்று, இளம் கலை படிப் புக்களுக்கான, மூன்றாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் நடந்தது. காலியாக உள்ள இடங்களுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டனர்.