sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மூன்று கிராம கோவில்களில் கும்பாபிஷேக விழா

/

மூன்று கிராம கோவில்களில் கும்பாபிஷேக விழா

மூன்று கிராம கோவில்களில் கும்பாபிஷேக விழா

மூன்று கிராம கோவில்களில் கும்பாபிஷேக விழா


ADDED : செப் 09, 2024 07:33 AM

Google News

ADDED : செப் 09, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அருகே, குப்பமேட்டுப்பட்டி, மேலப்பட்டி, பெரியபனையூர் கிராமங்களில் உள்ள கோவில்களில், கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.குளித்தலை அடுத்த கொசூர் பஞ்., குப்பமேட்டுப்பட்டியில், விநாயகர், மாரியம்மன், காளியம்மன், பாம்பலம்மன், கருப்பண்ணசாமி, முனியப்ப சாமி ஆகிய பரிவார

தெய்வங்களுக்கு, தனித்தனியாக கோவில்கள் உள்ளன. கோவிலை புனரமைப்பு செய்து, கும்பாபிஷேக விழா நடத்த கிராம மக்கள், விழாக்குழுவினர் முடிவு செய்தனர்.அதன்படி, நேற்று முன்தினம் காலை, குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, யாக சாலையில் புனித நீர் அடங்கிய கும்பத்திற்கு சிவாச்சாரியார்கள், இரண்டு கால பூஜை செய்தனர். நேற்று காலை, 8:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி, தீபாராதனை செய்தனர். அதை தொடர்ந்து, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல், தளிஞ்சி பஞ்., டி.மேலப்பட்டியில் அமைந்துள்ள பாம்பலம்மன் கோவில், நெய்தலுார் பஞ்., பெரியபனையூரில் அமைந்துள்ள பகவதி அம்மன், மாரியம்மன், சித்தி விநாயகர், முருகன், காளியம்மன், மாசி பெரியண்ணசாமி, பனையடி கருப்பு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us