/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய கராத்தே; அரவக்குறிச்சி மாணவருக்கு வெண்கலம்
/
தேசிய கராத்தே; அரவக்குறிச்சி மாணவருக்கு வெண்கலம்
ADDED : மார் 04, 2025 06:11 AM
அரவக்குறிச்சி: சேலத்தில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில், அர-வக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சூர்-யாவிற்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.
தேசிய அளவிலான கராத்தே போட்டி, சேலத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட கராத்தே கற்றுத் தேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சூர்யா கலந்து கொண்டார். தேசிய அளவில் பங்கேற்ற மாணவர்களுடன் திற-மையாக போட்டியிட்டு வெண்கலப்பதக்கம் வென்றார்.இவரை, கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.