ADDED : அக் 20, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் திருட்டு: தொழிலாளி புகார்
குளித்தலை, அக். 20-
குளித்தலை அடுத்த, கிருஷ்ணராயபுரம் பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜி, 23. கூலித்தொழிலாளி. இவருக்கு சொந்தமான ஹீரோ பைக்கை கடந்த, 17 இரவு தனது வீட்டில் நிறுத்தி வைத்து விட்டு, காலையில் பார்த்தபோது, காணவில்லை.
தனது பைக்கை காணவில்லை என, ராஜி கொடுத்த புகாரின்படி மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.