/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டைமண்டியில்வாழைத்தார்கள் விற்பனை
/
லாலாப்பேட்டைமண்டியில்வாழைத்தார்கள் விற்பனை
ADDED : பிப் 14, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாலாப்பேட்டை மண்டியில்வாழைத்தார்கள் விற்பனை
கிருஷ்ணராயபுரம், :கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப் பேட்டை, கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, கருப்பத்துார், வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப் புத்துார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிகளில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று நடந்த ஏலத்தில் ரஸ்தாளி தார், 350 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய், பூவன் வாழைத்தார், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வாழைத்தார்கள் சீரான விலையில் விற்பனையானது.

