/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாய்க்காலில் ஆகாயத்தாமரைவிவசாயிகள் பாதிப்பு
/
வாய்க்காலில் ஆகாயத்தாமரைவிவசாயிகள் பாதிப்பு
ADDED : மார் 06, 2025 01:50 AM
வாய்க்காலில் ஆகாயத்தாமரைவிவசாயிகள் பாதிப்பு
கிருஷ்ணராயபுரம்:பிள்ளபாளையம் பாசன வாய்க்காலில், ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து வருவதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் பஞ்சாயத்தில் பாசன வாய்க்கால் செல்கிறது. லாலாப்பேட்டை ரயில்வே கேட் அருகில் இருந்து துவங்கி, பிள்ளபாளையம் பிடாரி அம்மன் கோவில் வரை வாய்க்கால் மூலம், விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. வாய்க்கால் தண்ணீரை கொண்டு வாழை, வெற்றிலை, நெல் ஆகிய பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது பாசன வாய்க்காலில், அதிகமான ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் வாய்க்காலில் குறைந்த தண்ணீர் மட்டும் செல்கிறது. இந்த தண்ணீர், விளை நிலங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பாசன வாய்க்காலில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.