ADDED : மார் 08, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டூவீலர் திருட்டுதொழிலாளி புகார்
கரூர்:கரூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, டூவீலரை காணவில்லை என, கூலி தொழிலாளி போலீசில் புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், காக்காவாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 47; கூலி தொழிலாளி. இவர் கடந்தாண்டு டிச., 31ல், கரூர் ஈஸ்வரன் கோவில் முன், டி.வி.எஸ்., டூவீலரை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது, டூவீலரை காணவில்லை. இதுகுறித்து,
ராஜேந்திரன் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.