ADDED : மார் 16, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கணவர் மாயம்; மனைவி புகார்
கரூர்:கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.
கரூர், பெரியார் சாலை சிவானந்தா தெருவை சேர்ந்தவர் மாரியப்பன், 50; இவர் கடந்த, 14ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும், மாரியப்பன் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மாரியப்பனின் மனைவி ரூபா, 48, போலீசில் புகார் செய்தார்.
வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.