/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரத்து அதிகரிப்பால்பூக்கள் விலை குறைவு
/
வரத்து அதிகரிப்பால்பூக்கள் விலை குறைவு
ADDED : மார் 19, 2025 01:08 AM
வரத்து அதிகரிப்பால்பூக்கள் விலை குறைவு
கரூர்:பங்குனி மாதம் தொடங்கிய நிலையில், திருமணம் உள்ளிட்ட, சுப விசேஷங்கள் குறைந்துள்ளது. இந்நிலையில், பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், பொங்கல் பண்டிகையையொட்டி, கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள பூ மார்க்கெட்டில், ஒரு கிலோ மல்லிகை பூ, 2,700 ரூபாய் வரை விற்றது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ, 250 ரூபாயாக குறைந்தது. 600 ரூபாய்க்கு விற்ற கனகாம்பரம், 200 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்ற ஜாதி பூ, 250 ரூபாய்க்கும் விற்றது. ரோஜா, 120 ரூபாய்க்கும், சம்பங்கி, 150 ரூபாய்க்கும், செவ்வந்தி, 100 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து ஒரு கட்டு, 50 ரூபாய்க்கும், துளசி, நான்கு கட்டு, 40 ரூபாய்க்கும் விற்றது.