sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சியில் வான் நோக்கு நிகழ்ச்சி

/

அரவக்குறிச்சியில் வான் நோக்கு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் வான் நோக்கு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் வான் நோக்கு நிகழ்ச்சி


ADDED : மார் 19, 2025 01:10 AM

Google News

ADDED : மார் 19, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சியில் வான் நோக்கு நிகழ்ச்சி

அரவக்குறிச்சி:கரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க பிரசார உபகுழு சார்பில், கரூர் மாவட்ட செயலாளர் ஜான் பாஷா வழிகாட்டுதல்படி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வான் நோக்கு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் சாகுல் அமீது தலைமை வகித்தார். முதன்முறையாக பள்ளியில் டெலஸ்கோப் கொண்டு மாணவர்களுக்கு வானியல் அறிவு ஏற்படுத்தப்பட்டது. சூரியன் மறைந்ததும், மற்ற கோள்களின் நிலைகள் பற்றியும், டெலஸ்கோப் பற்றியும் மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் சரவணன் விளக்கி கூறினார். மேலும், மூளை சார்ந்த விளையாட்டுகளை பிரகலாவதி நடத்தினார். பெற்றோர்களின் அலைபேசியில், 'ஸ்கை வியூலைட் ஆப்' நிறுவி தரப்பட்டது. அறிவியல் பட்டதாரி ஆசிரியை ராபியா பஸ்ரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us