ADDED : மார் 20, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கரூர்:கரூர் அருகே கஞ்சா வைத்திருந்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ., உதயகுமார் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், ராயனுார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் டேனி, 21, என்பவரை தான் தோன்றிமலை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.