/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
/
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
ADDED : ஜூன் 21, 2025 01:07 AM
கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டையில், வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளளி, வீரகுமாரன்பட்டி, பொய்கைப்புத்துார், மகாதானபுரம், சிந்தலவாடி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழை சாகுபடிக்கு வாய்க்கால் பாசன தண்ணீர் கொண்டு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டு, லாலாப்பேட்டை வாழைக்காய் கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் பூவன் வாழைத்தார், 300 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 200 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 350 ரூபாய்க்கு விற்கப்பட்டது.