/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
குளித்தலையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 22, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, போலீசாரை கண்டித்தும், வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், மூத்த வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னாள் அரசு வழக்கறிஞர் மனோகரன் தலைமை வகித்தார். இளம் வழக்கறிஞர்களிடம் குளித்தலை போலீசார் கண்ணிய குறைவாக நடந்து கொண்டதை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.
மூத்த வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.