ADDED : நவ 20, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த கடவூர் யூனியன் சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா, 50, விவசாய கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் கோட்டமேட்டில் உள்ள, தன் தாயார் வீட்டுக்கு வரும்போது, காலில் பாம்பு தீண்டியது.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது கணவர் வீரப்பன், 55. கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

