ADDED : மே 22, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
குளித்தலை, ' குளித்தலை அடுத்த தரகம்பட்டி பகுதியில், கிராவல் மண் மற்றும் கனிமங்கள் கடத்தப்பட்டு வருவதாக, கரூர் புவியியல் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சங்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணியளவில் தரகம்பட்டி தாலுகா அலுவலகம் அருகே, அதி வேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இன்றி, 4 யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிந்தது. இந்நிலையில் டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பினார்.
பின்னர் லாரியை சிந்தாமணிபட்டி போலீசில் ஒப்படைத்து. உதவி புவியியலாளர் சங்கர் கொடுத்த புகாரின்படி, சிந்தாமணிபட்டி போலீசார் டிப்பர் லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.
