sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மக்கள் நீதிமன்றத்தில்1,583 வழக்குகளுக்கு தீர்வு

/

மக்கள் நீதிமன்றத்தில்1,583 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில்1,583 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில்1,583 வழக்குகளுக்கு தீர்வு


ADDED : மார் 09, 2025 02:04 AM

Google News

ADDED : மார் 09, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மக்கள் நீதிமன்றத்தில்1,583 வழக்குகளுக்கு தீர்வு

கரூர்:கரூர் மற்றும் குளித்தலையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், 1,583 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது. நேற்று கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய நீதிமன்றங்களில், எட்டு அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. அதில், வங்கி சிவில் வழக்கு, காசோலை வழக்கு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு உள்பட, 1,904 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இறுதியாக, 1,583 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, 13 கோடியே, 57 லட்சத்து, 89 ஆயிரத்து, 45 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. கரூரில் நடந்த, மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். அப்போது, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அனுராதா மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us