/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் வரும் 21ல் தனியார்வேலை வாய்ப்பு முகாம்
/
கரூரில் வரும் 21ல் தனியார்வேலை வாய்ப்பு முகாம்
ADDED : பிப் 19, 2025 01:47 AM
கரூரில் வரும் 21ல் தனியார்வேலை வாய்ப்பு முகாம்
கரூர்: கரூர், வெண்ணைமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும் 21 காலை, 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இங்கு, 25க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். முகாமில் எட்டாம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு, டிப்ளமோ,ஐ.டி.ஐ., மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொண்டு பணி வாய்ப்பை பெறலாம்.கரூர் மாவட்டத்தை சேர்ந்த, வேலை தேடும் இளைஞர்கள் தங்களுடைய சுய விபர குறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 94990 55912 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.