ADDED : ஆக 10, 2024 06:45 AM
கரூர : புகளூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் குண-சேகரன் தலைமை வகித்தார்.
நகராட்சி பகுதியில், எட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அவற்றை ஒவ்வொரு மாதமும், இரண்டு இடங்களில் சேகரித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பும் கட்டணம், சுகாதாரப் பணிக்கு தேவையான தளவாட பொருட்கள் வாங்குவது. நகராட்சியின், 24 வார்டு பகுதியில் அமைந்துள்ள வீடுகள், வணிக வளாகங்கள், சமுதாய கூடங்கள், கழிப்பிடங்கள், வாரச்சந்தை ஆகியவற்றில் தினந்தோறும் சுகா-தார பணிகள், டி.என்.பி.எல்., நிறுவனம் மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வழங்கிய, 45.34 லட்சம் நிதியில் சாக்கடை, குடிநீர், சாலை வசதிகளை மேற்கொள்வது உள்பட பல்வேறு தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், நகராட்சி கமிஷனர் ஹேமலதா, பொறியாளர் மலர்க்கொடி உள்பட பலர் பங்கேற்றனர்.

