/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினர்
/
கரூரில் மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினர்
கரூரில் மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினர்
கரூரில் மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினர்
ADDED : ஆக 01, 2024 07:27 AM
கரூர்: கரூரில், மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற, ஐக்கிய விவசா-யிகள் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கரூர் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், நேற்று காலை தலைமை தபால் நிலையம் முன், மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்-கப்பட்டிருந்தது. ஆனால், போராட்டத்துக்கு, கரூர் டவுன் போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இதையடுத்து, ஐக்கிய விவ-சாயிகள் முன்னணி சார்பில், மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து, கோஷங்கள் எழுப்பபட்டன. ஆர்ப்-பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்றனர். அவர்களை, கரூர் டவுன் டி.எஸ். பி., செல்வராஜ் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், கரூர் தபால் நிலையம் முன், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.