ADDED : ஆக 14, 2024 02:27 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், தட்டை பயறு அறுவடை விறுவிறுப்பாக துவங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில், கரூர் மாவட் டத்தில் காவிரி, அம-ராவதி ஆற்று பாசனபகுதிகளான புகளூர், வாங்கல், நெரூர், கிருஷ் ணராயபுரம், குளித்தலை, வெள்ளி யணை, ராஜபுரம், சின்-னதாராபுரம், க.பர மத்தி, அரவக்குறிச்சி மற்றும் கடவூர் உள் ளிட்ட பகுதிகளில், மானாவாரி நிலங்களில் பயறு வகைகள் சாகு-படி செய்யப்பட்டன.
அதில், ஊடுபயிராக தட்டை பயறு அதிக ளவில் சாகுபடி செய்-யப்பட்டது. காய் பிடிக்கும் பருவத்தில், மழை பெய்ததால் தட்டை பயறு நல்ல மகசூலை அடைந்து ள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:
கடந்த, மூன்று மாதங்களாக காவிரியாற்றில் தண்ணீர் செல்கிறது. இதனால், கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் கடந்த, இரண்டு மாதங்களாக மழை திருப்திகரமாக உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாய கிணறுகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது.
இதனால், மானவாரி நிலங்களில் பயறு வகைகள் நல்ல விளைச்-சலை கண்டுள்ளன. தட்டை பயறு அறுவடை துவங்கியுள்ளது. விவசாய நிலங்களை தேடி மொத்த வியாபாரிகள் வருகின்றனர். ஒரு கிலோ தட்டை பயறுக்கு, 80 ரூபாய் முதல், 90 ரூபாய் வரை விலை கேட்கிறோம்.
ஆனால், 60 ரூபாய் முதல், 70 ரூபாய் வரை விலை கிடைக்கி-றது. அடுத்த மாதத்தில் கிராம சந்தைகளில், பயறு வகைகள் அதி-களவில், குறைந்த விலைக்கு விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.
இவ்வாறு தெரிவித்தனர்.

