ADDED : ஆக 01, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவரது மனைவி ஈஸ்வரி, 36. இவர் கடந்த, 22ல் காலை வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை.
பெற்றோர், உறவினர்களின் வீடுகளுக்கும் ஈஸ்வரி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதாசிவம், 51, போலீசில் புகார் செய்தார். வாங்கல் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.