/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா
/
முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா
ADDED : மார் 25, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த முருகன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில், பங்குனி மாதம் பங்குனி
உத்திர விழா கொண்டாடப்படுகிறது. நேற்று காலை, கிருஷ்ணராயபுரம்
சிவன் கோவில் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம்
எடுத்து வருதல் காலை, 11:30 மணிக்கு முருகனுக்கு அபிஷேகம், சிறப்பு
அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்களுக்கு பிரசாதம்
வழங்கப் பட்டது. மதியம், 1:00 மணிக்கு சிறப்பு வழிபாடு, பூஜை செய்து
அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு முக்கிய வீதிகள்
வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

