/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் விளக்குகள் இல்லாத ரயில்வே பாலத்தால் அவதி
/
மின் விளக்குகள் இல்லாத ரயில்வே பாலத்தால் அவதி
ADDED : செப் 11, 2024 06:33 AM
கரூர்: கரூர் அருகே ரயில்வே பாலத்தில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.
கரூர்-சேலம் இடையே, புதிய ரயில்வே பாதை அமைக்கும் போது, மண்மங்கலம்-வாங்கல் இடையே வாகனங்கள் செல்ல வசதியாக, மாரிக்கவுண்டன் பாளையத்தில் பாலம் அமைக்கப்-பட்டது. அந்த பாலத்தின் வழியாக வேலாயுதம்பாளை யம், மண்-மங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், வாங்கல், நாமக்கல் மாவட்டம் மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டு-புத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பிறகும், விளக்குகள் போடப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில் பொதுமக்கள், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, மாரிக்க-வுண்டன் பாளையம் ரயில்வே பாலத்தில், மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.