ADDED : ஆக 10, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் போதும்பொண்ணு, 40, கூலி தொழிலாளி.
இவருடைய கணவர் காத்தமுத்து, 46, கட்டட வேலை செய்து வந்தார். கடந்த, 6 காலை, 11:00 மணியளவில் திருப்பூரில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எந்த தகவலும் கிடைக்கவில்லை. தன் கணவரை காணவில்லை என, மனைவி போதும் பெண்ணு கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

