நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, வயலுார் பஞ்., வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் வைரமணி, 42, கூலி தொழிலாளி.
இவரது மகள் தனியார் மருந்து கடையில் செவிலியராக வேலை செய்து வந்தார். கடந்த, 3ல் வீட்டில் இருந்தபோது மாலை, 5:00 மணியளவில் வெளியே சென்றவர், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.