ADDED : மார் 07, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்,:
லாலாப்பேட்டை மண்டியில், நேற்று வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார், திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்கள் அறுவடை செய்து கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது வரத்து சரிவு காரணமாக, வாழைத்தார்கள் விலை உயர்ந்து வருகிறது. பூவன் வாழைத்தார் ஒன்று, 300 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 200 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வாழைத்தார் ஒவ்வொன்றுக்கும், 50 ரூபாய் விலை உயர்ந்து விற்பனையானதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.