ADDED : மார் 10, 2025 01:22 AM
அ நிறம் | அளவு
ரத்ததான முகாம்
கரூர்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ரத்ததான கழகம் சார்பில், மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், நேற்று ரத்ததான முகாம் நடந்தது. அதில், சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் நினைவு நாளையொட்டி, 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில், மாநில துணைச்செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் சிவக்குமார், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் தண்டபாணி, சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
