ADDED : மார் 22, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கஞ்சா வைத்திருந்தவாலிபர் கைது
கரூர்:கரூர் அருகே, கஞ்சா வைத்திருந்த பெயின்டரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., லட்சுமி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் சணப்பிரட்டி மேலப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் சூர்யா, 19, என்பவரை, பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.