ADDED : ஏப் 01, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகள் மாயம்தந்தை புகார்
குளித்தலை:திருச்சி மாவட்டம், மணப்பாறை இனாம் புதுார் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 45. பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இவரது, 17 வயது மகள் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். குளித்தலை அடுத்த, வாழ்வார்மங்கலம் தென்னகரில் உள்ள உறவினர் மல்லிகா வீட்டில் இருந்தவர், கடந்த, 29 இரவு 8:30 மணி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
தனது மகளை காணவில்லை என, அவரது தந்தை பழனிசாமி கொடுத்த புகாரின்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.