ADDED : மார் 29, 2026 02:36 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம் :கருப்பத்துார், சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில் பங்குனி பெருந்திருவிழா துவங்கியது.கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துாரில், சுகுந்த குந்தாளம்பிகை சமேத சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாத பெருந்திருவிழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த, 23ல் கணபதி பூஜை செய்து விழா துவங்கப்பட்டது.
நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. மாலை 7:00 மணிக்கு பஞ்சமூர்த்தி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. வரும், 31ல் சிம்மபுரீஸ்வரர் சிவன் மற்றும் சுகுந்த குந்தாளம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் வைத்து, வடம் பிடித்து கோவிலை சுற்றி உலா வருதல் நடக்கவுள்ளது.
