ADDED : ஜன 08, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: சாலைபுதுார், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 66 ஆயிரம் ரூபாய்க்கு நிலக்கடலை வர்த்தகம் நடந்தது.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நிலக்கடலை ஏலம் நடந்தது. க.பரமத்தி, கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள், ஏலத்தில் கலந்து கொண்டனர். மொத்தம், 35 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 63.69 ரூபாய், அதிகபட்சமாக, 68.30 ரூபாய், சராசரியாக, 67.86 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 1,019 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 66 ஆயிரத்து, 873 ரூபாய்க்கு விற்பனையானது.