/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் குழாயில் விரிசல் வீணாக பாயும் தண்ணீர்
/
குடிநீர் குழாயில் விரிசல் வீணாக பாயும் தண்ணீர்
ADDED : மார் 29, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த பிள்ளபாளையம் சாலை வழியாக, காவிரி குடிநீர் குழாய்
செல்கிறது.
இந்த குழாய் மூலம் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு
குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது,
பிள்ளபாளையம் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இப்பணியின் போது குழாயில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி
வருகிறது. இதனால் கிராமங்களுக்கு இந்த குழாய் மூலம் போதுமான
குடிநீர் செல்லவில்லை. எனவே, விரிசல் அடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய
வேண்டும் என, பஞ்., நிர்வாகத்துக்கு மக்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.

