/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த மாஜி வி.ஏ.ஓ., மீது வழக்கு
/
அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த மாஜி வி.ஏ.ஓ., மீது வழக்கு
அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த மாஜி வி.ஏ.ஓ., மீது வழக்கு
அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த மாஜி வி.ஏ.ஓ., மீது வழக்கு
ADDED : செப் 15, 2024 02:41 AM
கரூர்: கரூர் அருகே, கோவில் செயல் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, மாஜி வி.ஏ.ஓ., உள்பட இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்பிரமணியர் கோவில் செயல் அலுவலர் சுகுணா, 39; இவர் கடந்த ஆக., 22ல் கரூர் ஆத்துார் கிராமம், சின்ன வடுகப்பட்டியில் உள்ள இடத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, (சர்வே எண், 569) கோவில் ஊழியர்களுடன் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்-டிருந்தார்.அப்போது, அங்கு சென்ற முன்னாள் வி.ஏ.ஓ., காமராஜ், 63, கண்ணம்மாள் ஆகியோர், கோவில் செயல் அலுவலர் சுகு-ணாவை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்துள்-ளனர்.
இதுகுறித்து, செயல் அலுவலர் சுகுணா கொடுத்த புகார்படி, வெங்கமேடு போலீசார் முன்னாள் வி.ஏ.ஓ., காமராஜ், கண்-ணம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்-றனர்.