/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேளாண்மை துறை சிறப்பு பயிற்சி முகாம்
/
வேளாண்மை துறை சிறப்பு பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 23, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் வட்டார வேளாண்மை துறை சார்பில், ரசயான உரங்களின் பயன்பாடுகளை குறைத்தல் என்ற தலைப்பில், புஞ்சை கடம்பங்-குறிச்சியில் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
ஒருங்கி-ணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, வேளாண்மை துறையில் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், உழவர் செயலியின் பயன்பாடுகள் குறித்து, வட்டார வேளாண்மை துறை அலுவலர் ரேணுகா தேவி பேசினார். முகாமில், புழுதேரி வேளாண்மை துறை தலைவர் திரவியம், வேளாண்மை அலுவலர் ஸ்ரீ பிரியா, உதவி நுட்ப மேலாளர் சுரேஷ் மற்றும் விவசாயிகள் பங்கேற்-றனர். முன்னதாக, விவசாயிகளுக்கு மண் மாதிரி அட்டைகள் வழங்கப்பட்டன.