sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தி.மு.க., டவுன் பஞ்., பெண் தலைவர் மீது தாக்குதல்: 2 பேர் மீது போலீசார் வழக்கு

/

தி.மு.க., டவுன் பஞ்., பெண் தலைவர் மீது தாக்குதல்: 2 பேர் மீது போலீசார் வழக்கு

தி.மு.க., டவுன் பஞ்., பெண் தலைவர் மீது தாக்குதல்: 2 பேர் மீது போலீசார் வழக்கு

தி.மு.க., டவுன் பஞ்., பெண் தலைவர் மீது தாக்குதல்: 2 பேர் மீது போலீசார் வழக்கு


ADDED : ஜூலை 23, 2024 01:38 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் அருகே, தி.மு.க.,வை சேர்ந்த டவுன் பஞ்., தலைவர் மற்றும் அவரது கணவரை தாக்கிய தாக, டவுன் பஞ்., அலுவலக உதவியாளர் உள்பட இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், 44; பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் டவுன் பஞ்.,சில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர், உப்பிடமங்கலம் வடக்கு கேட் பகுதியில், அரசுக்கு சொந்-தமான நிலத்தில் வீடு கட்டி வருவதாக புகார் எழுந்தது. இதனால், விளக்கம் கேட்டு உப்பிடமங்கலம் பஞ்., நிர்வாகம் சார்பில், சிவக்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நி-லையில், தி.மு.க.,வை சேர்ந்த உப்பிடமங்கலம் டவுன் பஞ்., தலைவர் திவ்யா, 32; அவரது கணவரான, உப்பிடமங்கலம் பேரூர் தி.மு.க., செயலாளர் தங்கராஜ், 38, ஆகியோர் கடந்த, 20ல் உப்பிடமங்கலம்-சேங்கல் சாலையில் நின்று கொண்டிருந்-தனர். அப்போது, அங்கு சென்ற சிவக்குமார், அவரது நண்பர் பிர-பாகரன், 42; ஆகியோர், தங்கராஜூடன் தகராறு செய்துள்ளனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, தாக்கி கொண்டனர். அதில், நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்-டது.

பிறகு, டவுன் பஞ்., தலைவர் திவ்யா கொடுத்த புகாரின்படி, சிவக்குமார், பிரபாகரன் ஆகியோர் மீது, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us