/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முன்னாள் முதல்வர்கள் சிலைக்கு மாஜி அமைச்சர் மாலை அணிவிப்பு
/
முன்னாள் முதல்வர்கள் சிலைக்கு மாஜி அமைச்சர் மாலை அணிவிப்பு
முன்னாள் முதல்வர்கள் சிலைக்கு மாஜி அமைச்சர் மாலை அணிவிப்பு
முன்னாள் முதல்வர்கள் சிலைக்கு மாஜி அமைச்சர் மாலை அணிவிப்பு
ADDED : ஆக 01, 2024 07:28 AM
கரூர்: நிலம் அபகரிப்பு புகாரில், ஜாமினில் வெளிவந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் முதல்வர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார்.
கரூர் அருகே, தோரணகல்பட்டி, குன்னம்பட்டியில், பிரகாஷ் என்-பவரது மகள் ேஷாபனா பெயரில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை போலியான பத்திரம் மூலம், அபகரித்து கொண்டதாக எழுந்த புகாரில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை கடந்த, 17ல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து திருச்சி மத்-திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை விஜயபாஸ்கருக்கு, கரூர் ஜே.எம்., -1 நீதிமன்ற நீதிபதி பரத்-குமார், நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று மாலை, 5:30 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் இருந்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விடுவிக்-கப்பட்டார். பிறகு நேற்று இரவு, 8:30 மணிக்கு கரூர் வந்த விஜய-பாஸ்கர், லைட் ஹவுஸ் கார்னில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட அ.தி.மு.க., அவைத்தலைவர் திருவிகா, ஜெ.,பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனி-ருந்தனர்.