/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேங்காய் விளைச்சல் அதிகரிப்பு விலை இல்லாததால் விவசாயிகள் கவலை
/
தேங்காய் விளைச்சல் அதிகரிப்பு விலை இல்லாததால் விவசாயிகள் கவலை
தேங்காய் விளைச்சல் அதிகரிப்பு விலை இல்லாததால் விவசாயிகள் கவலை
தேங்காய் விளைச்சல் அதிகரிப்பு விலை இல்லாததால் விவசாயிகள் கவலை
ADDED : மார் 30, 2024 01:54 AM
கரூர்:தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தமிழகத்தில் தேங்காய் சாகுபடியில், கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்கள் முன்னணியில் உள்ளது.அதற்கு
அடுத்தப்படியாக, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் உள்ளது. இந்த
மாவட்டங்களில் விளையும் தேங்காய், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி
வைக்கப்படுகிறது.
கடந்த, இரண்டு ஆண்டுகளாக பருவ மழை சராசரி
அளவுக்கு பெய்ததால், தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால்,
தேங்காய்க்கு கடந்தாண்டை விட, நடப்பாண்டு குறைந்தளவே விலை
கிடைக்கிறது. மேலும், வெளி மாநிலங்களில் இருந்து, தேங்காய்
விற்பனைக்கு வருவதால் போதிய விலை இல்லை என, விவசாயிகள் புலம்பு
கின்றனர்.
இதுகுறித்து, தென்னை விவசாயிகள் கூறியதாவது:
தமிழகத்தில், நடப்பாண்டு தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
ஆனால், வெளி மாநிலங்களிலும், தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதனால், வெளிமாநிலங்களுக்கு எளிதாக அனுப்ப முடியவில்லை. மேலும்,
பிற மாநிலங்களில் விவசாயிகள் தென்னை சாகுபடியில் இறங்கியுள்ளனர்.
ஒட்டு ரக தென்னை சாகுபடியில், குறைந்த ஆண்டுகளில் அதிகப்படியான
மகசூல் கிடைக்கிறது. இதனால் தமிழகத்தில் இருந்து தேங்காயை, பிற
மாநிலங்கள் எதிர்பார்ப்பது இல்லை. எனவே, தமிழகத்தில் தேங்காய் தேக்கம்
அடைந்து, விலை குறைந்துள்ளது.
கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் முதல் தரம் ஒரு தேங்காய் மொத்த விலையில், 13 முதல், 18 ரூபாய் வரை விற்பனையானது.தற்போது,
12 முதல், 15 ரூபாய்தான் கிடைக்கிறது. இது தென்னை விவசாயிகளுக்கு
நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை நீடிக்கும் பட்சத்தில்
தேங்காய்க்கு மேலும் விலை குறையும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

