/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்
/
கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்
ADDED : ஆக 22, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லுாரி மாணவி மாயம்
போலீசில் தந்தை புகார்
கரூர், கரூர் அருகே, கல்லுாரி மாணவியை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், அதியமான் கோட்டையை சேர்ந்த, 18 வயது கல்லுாரி மாணவி தனியார் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 18ல் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தந்தை அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.