/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருநங்கைகளுக்கு இலவச வீடு வழங்கல் விழா
/
திருநங்கைகளுக்கு இலவச வீடு வழங்கல் விழா
ADDED : ஜூலை 26, 2024 02:30 AM
கிருஷ்ணராயபுரம்: மணவாசி கிராமத்தில், திருநங்கைளுக்கு இலவச வீடு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மண-வாசி கிராமத்தில் உள்ள திருநங்கைளுக்கு இலவசமாக, கரூர் வி.கே.ஏ., குழுமம் சார்பில் சமூக பொறுப்பு நிதியின் கீழ், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக வீடு கட்டப்பட்டது. அந்த வீடு-களை முறைப்படி திருநங்கைளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, ஏழு வீடுகள் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார். டி.ஆர்.ஓ., கண்ணன், வி.கே.ஏ., குழுமம் நிர்வாகிகள் சாமியப்பன், கருப்-பண்ணன், கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன் சுமித்திராதேவி, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, மண-வாசி பஞ்சாயத்து தலைவர் சிவராமன் மற்றும் அரசு அலுவ-லர்கள், கட்சி நிர்வாகிகள், திருநங்கைகள் கலந்து கொண்டனர்.