/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று ஆடிப்பெருக்கு விழா பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு
/
இன்று ஆடிப்பெருக்கு விழா பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு
இன்று ஆடிப்பெருக்கு விழா பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு
இன்று ஆடிப்பெருக்கு விழா பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு
ADDED : ஆக 03, 2024 01:08 AM
கரூர், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோர பகுதிகளில், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
தமிழர்களின் முக்கிய திருவிழாவான, ஆடிப் பெருக்கு இன்று கொண்டாடப்படுகிறது. இன்று ஆயிரக்கணக்கான பொது மக்கள், ஆற்றில் புனித நீராட உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், காவிரியாறு பகுதிகளான வேலாயுதம்பாளையம், புகளூர், தவிட்டுப் பாளையம், வாங்கல், நெரூர், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலையில் ஆடிப் பெருக்கையொட்டி வழக்கமாக குளிப்பது வழக்கம். அதேபோல், அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பெரியாண்டாங் கோவில் தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் குளிப்பர். இதனால், 200 க்கும் மேற்பட்ட போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில், பாதுகாப்பு பணியில் இன்று ஈடுப்பட உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக, காவிரியாற்றின் ஓரத்தில் நெரூரில் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. இன்று ஆடிப்பெருக்கு விழாவுக்காக, நெரூர் செல்லும் பொதுமக்கள் காவிரியாற்றில் புனித நீராடுவதால், அங்கும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.