ADDED : பிப் 25, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில், புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமை வகித்தார். திட்டப் பணிகள் குறித்து மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் யுவராஜ் பேசினார். சிறப்பு அழைப்-பாளராக பங்கேற்ற பள்ளி தாவரவியல் ஆசிரியர் ஜெரால்டு, சுற்-றுச்சூழல் துாய்மை குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சர-வணன், ஓவிய ஆசிரியர் ஜெய்சங்கர், நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.