/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் நகராட்சியில் மகளிர் திட்டம் சார்பில் ஆய்வு கூட்டம்
/
புகழூர் நகராட்சியில் மகளிர் திட்டம் சார்பில் ஆய்வு கூட்டம்
புகழூர் நகராட்சியில் மகளிர் திட்டம் சார்பில் ஆய்வு கூட்டம்
புகழூர் நகராட்சியில் மகளிர் திட்டம் சார்பில் ஆய்வு கூட்டம்
ADDED : ஜூலை 22, 2024 08:47 AM
கரூர் : தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதாரம் இயக்கம் மற்றும் கரூர் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், மணிமேகலை விருது வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம், புகழூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
அதில், மகளிர் சுய உதவிக்குழு செயல்-படும் விதம், முதல்வரின் காலை உணவு திட்-டத்துக்கு உதவுதல், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துதல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட, தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கும் விதம் குறித்து, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில், வாழ்ந்து காட்டுவோம் மாநில செயலாளர் பாபு, கரூர் மாவட்ட திட்ட இயக்குனர் சீனிவாசன், உதவி திட்ட அலுவலர் ராஜூ, சமுதாய அமைப்-பாளர் அமுதா, வளர்ப்பயிற்றுநர்கள் ரேவதி, லலிதா மற்றும் 20க்கும் மேற்பட்ட சுய உதவிக்-குழுவினர் பங்கேற்றனர்.